குடிநீர் வசதி தேவை

Update: 2023-03-26 18:23 GMT
செஞ்சி ஒன்றியம் செம்மேடு ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் உள்ள 9-வது வார்டில் குடிநீர் வசதி இல்லை. நிலத்தடி நீரும் உப்பு கரிப்பதால், கிராம மக்கள் காலி குடங்களுடன் வெகுதூரம் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அண்ணாநகர் கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்