'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-03-26 17:41 GMT

கோபி-கள்ளிப்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிளை தபால் நிலையம் அருகே குடிநீர் குழாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை சரிசெய்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்