சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டி

Update: 2023-03-26 13:14 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு காந்திநகரில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது நீர்த்தேக்க தொட்டிக்கு மேலே ஏற அமைக்கப்பட்டுள்ள படிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்