குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-03-26 12:22 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விசாலாட்சி நகர் செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 6 நாட்களாக குடிநீர் வெளியேறி ஜெயங்கொண்டம்-தா.பழூர் சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் போதிய குடிநீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்