வீணாகும் குடிநீர்

Update: 2023-03-22 15:26 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பழைய தாலுகா அலுவலகம் அருகில், நாமக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட 'கேட்வால்வு' திறந்து தண்ணீர் சாலையில் வெளியேறி, சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வாரத்துக்கும் மேல் சாலையில் வெளியேறி சாக்கடையில் கலந்து தண்ணீர் வீணாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரதி, மோகனூர்.

மேலும் செய்திகள்