சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சரி செய்ய கோரிக்கை

Update: 2023-03-22 12:35 GMT
அரியலூர் மாவட்டம், ஆண்டிடம் வட்டம், பட்டணங்குறிச்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்