பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2023-03-19 17:10 GMT

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி நெடுஞ்சாலையில் நாவல்பட்டி காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த தொட்டியில் குடிநீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-மணி, நாமக்கல்.

மேலும் செய்திகள்