வீணாகும் குடிநீர்

Update: 2023-03-19 17:09 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் நாமக்கல் ஆட்டோநகர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. எஸ்.வாழவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பின்புறம் செல்லும் இந்த குழாயில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையும் சேதமடைகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.

-ராம்குமார், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்