குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-03-08 13:31 GMT
அரியலூர் மாவட்டம், கா.அம்பாபூர் கிராமத்தில் ஏராளாமன பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிபொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்