குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-08 11:38 GMT

சேலம் மேற்கு மாவட்டம் நடுவநேரி மேட்டுக்காடு 2- வது வார்டில் மேல்நிலை தொட்டிகளுக்கு கடந்த 25- நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. கோடைகாலம் தொடங்குவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதனை உரிய அதிகாரிகளிடமும், ஊர் பஞ்சாயத்து தலைவரிடமும் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. எனவே விரைவில் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய அவசியம் நடவடிக்கை தேவை.

--பாலாஜி, சேலம்.

மேலும் செய்திகள்