குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-02-26 10:32 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் ராயபுரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் சமீபத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து அதிகளவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து வீணாகி வருகிறது. கோடை வெயில் வாட்ட தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இப்படி குடிநீர் வீணாகி வருவதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். குழாயைத் திறந்த ஆள் சரியாக மூடாததினால் தான் நீர் வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகத்தினர். இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

வின்சென்ட்ராஜ் ராயபுரம்.

90558 17499

------

மேலும் செய்திகள்