வீணாகும் தண்ணீர்

Update: 2023-02-22 16:57 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பெரமாண்டம்பாளையத்தில் இருந்து செல்லும் ஓலப்பட்டி பிரிவு ரோடு, ஆரியூர் பிரிவு ரோடு ஆகிய மூன்று ரோடுகளும் சந்திக்கும் மைய பகுதியில் விவசாய நிலத்திற்கு செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்கிறது. இதனால் தார் சாலை சேதமாகுவதுடன், வாகன ஓட்டிகள் தண்ணீரில் வழுக்கி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்குமார், ஆரியூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்