நல்லி மாற்றப்பட்டது

Update: 2023-02-22 08:00 GMT


நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் யாதவர் மேற்கு தெருவில் ஓம் சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்குழாயின் நல்லி சேதமடைந்து குடிநீர் வீணாக பாய்ந்தது. இதுபற்றி 'தினந்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நல்லியை மாற்றி விட்டு புதிய நல்லியை பொருத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்