நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Update: 2023-02-15 13:17 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த குழாய் சாலையின் அடியில் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை சரிசெய்ய செய்ய திரும்ப திரும்ப நடப்பதால் இந்த பள்ளத்தால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்