குடிநீர் மேல்நிலை தொட்டியை சூழ்ந்த கொடிகள்

Update: 2023-02-12 09:41 GMT

காங்கயம் பழையகோட்டை சாலை சத்திரவலசு பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியின் மேற்பகுதிக்கு செல்ல ஏணி உள்ளது. இந்த ஏணி முழுவதும் கொடிகள் படர்ந்து கிடக்கிறது. இதனால் மேலே ஏறி சென்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்