குழாயில் உடைப்பு

Update: 2023-02-08 14:35 GMT
அரியலூர் மாவட்டம், கோடாலி கருப்பூர் கிராமத்தில் இருந்து உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் ஆற்று தண்ணீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு செல்லும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதுபோல் கோடாலி கருப்பூர் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து அணைக்குடம் கிராமம் வழியாக செல்லும் குழாயில் சோழமாதேவி பிரிவு சாலை அருகில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 8 நாட்களாக தண்ணீர் அதிக அளவில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வலியுறுத்தி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனால் குழாய் உடைக்கும் மூலம் வெளியேறும் தண்ணீர் மீண்டும் குழாயில் தண்ணீர் வரத்து நின்றவுடன் உள்புறமாக இழுத்துக் கொள்கிறது. எனவே இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பயன்படுத்துபவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்புடைய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்