வீணாகும் குடிநீர்

Update: 2023-02-08 12:28 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தா.பழூர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த குடிநீரானது தற்போது வரை வீணாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீர் வரும் நேரத்தில் தண்ணீர் வெளியாகும். தண்ணீர் நிறுத்தியவுடன் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் குழாய் வழியாக சென்று விடுகிறது. இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் அரசு மருத்துவமனை திருப்பத்தில் உள்ள காளியம்மன் கோவில் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்