மூடி அமைக்கப்பட்டது

Update: 2023-02-08 07:16 GMT

மூடி அமைக்கப்பட்டது

நாகர்கோவில் மூடி அமைக்கப்பட்டதுமாநகராட்சிக்கு உட்பட்ட குளத்தூரில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் குளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் மூடி அமைக்கப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவதால் பறவைகள் தஞ்சமடைந்து தண்ணீரில் விழுந்து இறக்கும் நிலை இருந்தது. இதுபற்றி, 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து திறந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு மூடியை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்