பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-02-05 11:33 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், குண்டவெளி ஊராட்சியில் உள்ள சொக்கலிங்கபுரம் பழைய தெருவில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிந்து சுமார் ஓராண்டு ஆகிய நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்