வீணாகும் குடிநீர்

Update: 2023-02-01 16:58 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மைய பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இந்த குடிநீர் தொட்டியை சுற்றி தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மூர்த்தி, எம். செட்டிஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்