வீணாகும் குடிநீர்

Update: 2023-01-29 12:14 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயிலிருந்து குழாய் உடைப்பு காரணமாக மடைதிறந்த வெள்ளம் போல் தண்ணீர் விரயமாகி கொண்டு இருக்கிறது. இதனால் அதிக அளவு குடிநீர் வீணாவதுடன், குழாய் உடைப்பு வழியாக வெளியேறிய தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் செல்வதால் சுகாதார சீர்கேடு உடைய தண்ணீர் குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொடர்புடைய அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்