சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2023-01-29 12:05 GMT

மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி 43 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது தொட்டி கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. தொட்டி பகுதியில் சிறுவர்கள் விளையாடுவார்கள். இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சேதடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

மேலும் செய்திகள்