குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-29 11:20 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரிய கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. தொட்டியை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்துள்ளது மட்டுமின்றி தொட்டியும் உடைந்த நிலையில் கிடக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் குடிநீருக்கான நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்