குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-29 11:20 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி முக்கூட்டு-மதுக்கூர் சாலையில் செட்டிகுளம் உள்ளது. இந்த குளத்துக்குள் குப்பைகள் கொட்டப்பட்டு பாசிபிடித்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குளத்தின் நீரும் மாசுபட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றிவிட்டு குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.



மேலும் செய்திகள்