குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2023-01-22 15:11 GMT

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடம் அருகில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிழற்கூடத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு தண்ணீர் தொட்டி தாகம் தீர்த்தது. தற்போது அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை. கோடை காலம் நெருங்குவதால் பயணிகளும், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயன்பெறும் வகையில் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

-மணியன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்