வீணாகும் குடிநீர்

Update: 2023-01-22 14:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எச்சம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் சாலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொன்னுசாமி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்