வறண்டு கிடக்கும் குடிநீர் தொட்டிகள்

Update: 2022-07-18 18:17 GMT

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பயணிகள் நலன்கருதி அமைக்கப்பட்ட நிலையில் தற்போது நிழற்கூடங்கள் சரிவர பராமரிக்கப்படாமலும், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் பயனற்று குடிநீர் தொட்டிகள் கிடக்கின்றன. எனவே ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடங்களை சீரமைத்து குடிநீர் தொட்டிகளில் நீரை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணி, ஆண்டகளூர் கேட்.

மேலும் செய்திகள்