வீணாகும் குடிநீர்

Update: 2022-07-18 18:12 GMT

நாமக்கல் நகராட்சி சார்பில் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, வீடு, வீடாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நகராட்சிக்கு செல்லும் வழியான சேலம் ரோடு கார்னர் பகுதியில் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடி சாக்கடையில் கலக்கிறது. இதனை உடனடியாக சரிசெய்து, வீணாகும் குடிநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, நாமக்கல்.

மேலும் செய்திகள்