மாசடையும் தண்ணீர்

Update: 2023-01-04 08:10 GMT

தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட புரவுசேரி கிராமத்தில் சாலையோரம் விவசாய பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் சிலர் ஓட்டல் கழிவுநீர்களை கொட்டி வருகின்றனர். இதனால், கால்வாயில் செல்லும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தினால் பயிர்கள் நாசமடைந்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாசன கால்வாயில் ஓட்டல் கழிவுநீரை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜீவா, தேரேக்கால்புதூர். 

மேலும் செய்திகள்