பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-12-28 15:36 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2019-20 -ம் ஆண்டில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்