மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-11 11:46 GMT

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் குமிழக்குடி ஊராட்சியில் வண்டாண்டி கிராமம் உள்ளது. இங்கு குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்