ஆபத்தான மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி

Update: 2022-12-04 13:23 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா இளங்கார்குடி அம்மன் கோவில் தெருவில் மேல்நிலைநீர்த்தொட்டி உள்ளது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கியுள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் தொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேல்நிலைநீர்த்தேக்கதொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்