தெருவை சூழ்ந்த ஏரிநீர்

Update: 2022-11-27 13:17 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த செண்பக மகாதேவி கிராமம் ஆதிதிராவிடர் தெரு அருகே ஏரி அமைந்துள்ளது. தற்போது பெய்த மழையால் ஏரி நிரம்பி வழிந்து ஓடுகிறது. இந்த ஏரியில் 2 மதகுகள் இருந்தும் அடைபட்டு இருப்பதால் அந்த தெரு முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் தெருவில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-க.அசோகரத்தினம், செண்பகமாதேவி, நாமக்கல்.

மேலும் செய்திகள்