மழைநீரால் இடியும் நிலையில் வீடுகள்

Update: 2022-11-23 17:30 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் வெண்ணந்தூர்-ராசிபுரம் செல்லும் சாலை அருகே உள்ள விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி ஏரியை போல் காட்சியளிக்கிறது. இந்த நீரால் அப்பகுதியில் உள்ள வீடுகள் இடியும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து ஏரிபோல் தேங்கி தண்ணீரை வெளியேற்றி மேலும் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆறுமுகம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்