சாலையில் ஓடும் மழைநீர்

Update: 2022-11-23 17:28 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் தொடர்மழையால் அங்குள்ள கரடு மற்றும் வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறும் மழை நீரானது தாழ்வான பகுதியை நோக்கி ஓடிக் கொண்டு உள்ளது. அதேபோல் அங்குள்ள பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள சேலம் பிரிவு சாலையில் அப்பகுதியில் தேங்கிய மழைநீர் வழிந்து செல்வதால் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும்.

-கண்ணன், நாமக்கல்.

மேலும் செய்திகள்