ஆபத்தான நிலையில் மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி

Update: 2022-11-20 10:44 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி சித்திரக்குடி ஊராட்சி புதுகல்விராயன்பேட்டையில் மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கியுள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன்காரணமாக மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்