குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

Update: 2022-11-13 16:33 GMT
செஞ்சி அருகே மேல்சேவூர் ஊராட்சி கல்லாங்குப்பம் கிராமம் சிட்டிபாபு தெருவில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்