குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2022-11-13 11:47 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தச்சம்பட்டு. கிழக்குத் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், மதிய உணவு சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை கழுவதற்கும், குடிப்பதற்கும் தண்ணீரை தேடி அலைகின்றனர். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தொலைதூரத்தில் உள்ள மினிடேங்குக்கும் சென்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெண்டும்.

-அஜித், தச்சம்பட்டு.

மேலும் செய்திகள்