புகார் பெட்டி செய்தி எதிரொலி; குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் சரி செய்யப்பட்டது

Update: 2022-11-09 14:59 GMT
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்து கிடப்பதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார்பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து சுத்திகரிப்பு எந்திரத்தை அதிகாரிகள் பழுதுநீக்கி, பயணிகளுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்