தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-11-06 19:23 GMT
விழுப்புரம் மாவட்டம் கோனூர் கிராமத்தில் உள்ள தெருவில் சாலை அமைக்காததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருவதால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி அங்கு சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்