மார்க்கெட் வளாகத்தில் அவதி

Update: 2022-11-03 05:43 GMT

சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் காய்கரி மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. வளாகத்துக்குள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஆங்காங்கே மழைநீர் தேக்கம் ஏற்பட்டு நடந்து செல்லவே முடியாத நிலைய்ள்ளது. சேரும் சகதியுமாக இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மார்க்கெட் வளாகத்தில் சிமெண்ட் அல்லது தார் கொண்டு தரை அமைக்கப்பட்டால், இனிவரும் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்