வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2022-10-23 11:39 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையோரம் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் விளைபயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்