திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ்நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்கு செல்கிறது. எனவே மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.