குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-09-25 16:49 GMT

செம்பட்டி அருகே மதுரை ரோட்டில் பச்சமலையான் கோட்டை பிரிவு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது அங்கு பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்