பழுதடைந்த மினி குடிநீர் தொட்டி

Update: 2022-09-24 15:36 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் ஊராட்சியில் உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மினி குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்