குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-07-14 10:35 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ஓடாச்சேரியில் இருந்து நாகை நகராட்சிக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வீணாக வெளியேறி வயல்வெளிகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்