நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தேங்கல்பாளையம் ஊராட்சியில் கொடாம்பு அணைக்கட்டில் இருந்து கண்ணாங்குட்டை செல்லும் ஓடையில் ஆனை பட்டியான் காலனி அருகில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் மழைநீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்றி ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், தேங்கல்பாளையம், நாமக்கல்.