புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா

Update: 2022-09-11 13:38 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் காலனி எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 1983 -ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பழுதடைந்த காரணத்தால் இடித்து அகற்றப்பட்டது ஆனால் அதன் பின்னர் அங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படவில்லை .இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .இதை தவிர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்ட அதே இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்