சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-04 16:57 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தேங்கல்பாளையம் அணைப்பட்டியான் காலனியில் இருந்து மயானம் செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த ரெயில்வே பாலம் கொடம்பிலிருந்து கண்ணாங்குட்டைக்கு செல்லும் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மயானத்திற்கு செல்லும் சாலை தடைப்பட்டுள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேல், தேங்கல்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்