குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-02 09:10 GMT

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் மணியாநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பேரூராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு இதுவரை கொடுக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதியை ேசர்ந்த பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சுத்தமாக குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, சுத்தமான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குணசேகர், மணியாநகர்.


மேலும் செய்திகள்